பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபாவின் வழக்கறிஞரான தீபிகா ராஜவத், ஆர் எஸ் எஸ் சார்பு ஹிந்துவா இயக்கங்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்றும் , தான் கொல்லப்படலாம், என தெரிவித்தது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

Special Correspondent

காஷ்மீரிலுள்ள கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிறுமி ஆசிஃபாவிற்கு ஆதரவாக வாதாட இருக்கும் வழக்கறிஞர் தீபிகா ராஜவத் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், "இந்த வழக்கிலிருந்து விலகி விடுங்கள் என எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. நான் எப்போதுவரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது. நான் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம், பலாத்காரம் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பதை உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஹிந்து கோவில் பூசாரி, 3 போலீசார் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி கத்துவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என கேட்ட நீதிபதிகள் மேலும் இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், இவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், மாநில அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை வரும் 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு பிரபல நடிகர், நடிகைகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் நடிகை தமன்னா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... "ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது.நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடைவு கொண்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடுமையை எதிர்த்து நீதி வேண்டி கையில்
"Iam Hindustan
Iam ashamed
#justice for our child. 8 years old. Gangraped.
Murdered in ‘devi’ thaan temple.
#kathua"

என்று எழுதிய பதாகையை கையில் ஏந்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

சார்பு செய்திகள் : குஜராத்திலும் தொடரும் சிறுமிகள் பாலியல் கொலைகள்