பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், திண்டுக்கல் கோர்ட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேரும் ஆஜராகவில்லை.

Special Correspondent

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (28). கோயில் பூசாரி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெரியகுளம் முன்னாள் நகராட்சி தலைவரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் நீதிமன்றம் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 61 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ஓ.ராஜா உள்பட 6 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டார்.