எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதற்கு அதிமுகவிலே கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Special Correspondent

ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவது வழக்கமானது தான் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சிலர் கௌரவத்திற்காக கூட இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவார்கள் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவதன் பின்னணி குறித்து உட்கட்சி தகவல் கசிகிறது.

ஓபிஎஸ்க்கு மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வருக்கோ மாநில போலீஸாரின் பாதுகாப்பு மட்டுமே உள்ளது. தற்போது நடைபெறும் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே நடைக்கும் அதிகாரமிக்கவர் என்பதை காட்டவே எடப்பாடி பழனிசாமி, இசட் பிளஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்தே ஓபிஎஸ் விட தானே உயர்ந்தவர் என்பதை எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்தே மத்திய அரசு யார் பக்கம் செய்கிறது என்பது தெளிவாக தெரியும் என்கிறார்கள் அதிமுகவினர்...

அதே சமயம் அதிமுகவின் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவுக்கு கொடுத்த அதே பாதுகாப்பை கேக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 22-09-2017 அன்றே Z+ விளக்கப்பட்டது என்று எடப்பாடியும் பன்னிர் செல்வமும் கேக்க மறைக்கிறார்கள் என்று வேதனையோடு கேக்கிறார்கள்.