2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தஞ்சாவூரில் பிறந்தவர். 65 வயதான இவர், தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுமையமான ‘தி ராயல் சொசைட்டி’யில் பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் ...

Special Correspondent

இந்திய அரசு யார் என்ன இறைச்சி சாப்பிடுகிறார் என்பதுபற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பதை விட்டு, கல்விக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும்...

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை தேடிக் கொண்டிருப்பவர்கள், நாட்டுப்பற்றுடன் நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு உண்மையில்மத விரோதப் போக்கை தொடர்கிறார்கள்: இதனால் நாட்டில் மோசமான விளைவுகளே அரங்கேறுகின்றன என்று கூறியுள்ள வெங்கட்ராமன், நவீனமயமாக்கல் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா பின்தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் போட்டியாக கருதப்படும் சீனா ரோபோக்கள் தயாரிக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கவும் பெருமளவு முதலீடுகளைச் செய்கிறார்கள்; இது எதிர்காலத்தில் அவர்களுக்கும் பெருதவியாக அமையப் போகிறது...

இதுபற்றியெல்லாம் இந்தியா யோசிக்கவில்லை என்றால் போகிற போக்கில இந்தியா பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் வெங்கட்ராமன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா நாட்டின் பல்கலை கழகத்தில் விஜயம் செய்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை காட்டிலும் சீனா வளர்ந்து வருகிறது என்கிற இதே கருத்தை கூறியதும் குறிப்பிடத்தக்கது.