கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நகரில் மத கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கோயிலில் பறந்த காவிக் கொடியை தாங்களே எரித்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.

Special Correspondent

அந்த நகரிலுள்ள நாயக்கர் வீதியிலுள்ள பிரபல விநாயகர் கோயிலில் பறந்து கொண்டிருந்த காவி கொடியை சம்பவத்தன்று நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மஞ்சு மற்றும் பங்காரா ஆகியோர் கீழே இறக்கி எரித்துள்ளனர்.

மாற்று மதத்தவர்கள் கொடியை எரித்துவிட்டதாக கூறி மத கலவரத்தை உருவாக்குவது இவர்கள் நோக்கம் பலிக்கவில்லை.

சங்பரிவார் அமைப்பை சேர்ந்த இவர்கள்தான் கொடியை எரித்தது என்று கண்டுபிடித்த போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்கள் உறவினர்களும், அண்டை வீட்டுக்காரர்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, அப்பாவிகளை கைது செய்துவிட்டதாக கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதன் இடையே தனது போன் மத்திய அரசு மூலம் ஒட்டு கேட்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை அம்மாநில முதல்வர் சித்தராமையா வெளிட்ட தகவலால் பரபரப்பு கூடியுள்ளது.