திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக முன்னர் வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 MLA-க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Special Correspondent

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக பேரவையில் நடைபெற்ற பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற OPS மற்றும் அவரது ஆதரவு MLA-க்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆனால் அவர்கள் மீது சபாநாயகர் ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. OPS உட்பட 12 MLA-க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் படி சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்பு அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு தற்போது அதே அரசில் பதவி வகித்து கொண்டிருக்கும் OPS மற்றும் மற்ற 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் பட்சத்தில், கட்சி தாவல் தடை சட்டம் பயன்படுத்தி தினகரன் அணி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகருக்கு பல வித நெருக்கடியை இந்த வழக்கு தரும் என்றும் மேலும் இது பல சட்ட பிரச்சனைகளை அதிமுக எடப்பாடி அரசுக்கு உருவாக்கும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

திமுக தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்கிறது நீதிமன்ற தகவல்./