டெங்குக் காய்ச்சல் (Dengue fever) வந்தால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.

Special Correspondent

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக நேற்று வரை 178 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் குழந்தைகள். 17-09-2017 மட்டும் ஒரே நாளில் 65 பேர் அனுமதிக்கப்பட்டனர்.ரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை தரையில் படுக்க வைத்து சிகிச்சை செய்வதால் சர்ச்சை வெடித்துள்ளது.

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மதுரை செல்லூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நான்கரை வயது சிறுமி ஐன்ஜீனா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஒத்தக்கடை பகுதியில் டெங்கு பாதிப்பு காரணமாக, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 வயது சிறுமி திருச்செல்வியும் இன்று காலை பலியானார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காய்ச்சல் காரணமாக, இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு, நவாஸ் என்பவர் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் டெங்குவுக்கு பலியானார். எனினும், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், இதுவரை எந்த சுகாதார நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனும், சிறுமியும் டெங்குக் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பெண் மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார். நடுகந்தன்குடி கிராமத்தை சேர்ந்த மோனிஷா என்ற இளம்பெண் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உள்ளாட்சிஅமைப்புகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததும் டெங்கு பாதிப்புக்கான காரணம் என எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.