மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, புணேவில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Special Correspondent

மஹாராஷ்டிரா மாநிலம் புணேவில் செயல்பட்டு வரும் மெயர் எம்.ஐ.டி பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து, புதனன்று பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இனிமேல் மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில் அணியும்,ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷ்யங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நிர்வாகம், இதனை பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு நேரில் தெரிவித்தும் அப்பள்ளி தலைமை நிர்வாகி சூசித்திரா காரட் சுத்தம் வேண்டியே வெள்ளை அல்லது தோல் நிற கலர் என்றும் அதனால் அந்த உத்தரவை மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்றும் கூறப்பட்ட நிலையில்.,

Special Correspondent

இதுதொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநில கல்வித்துறை நத்தை வேக நடைவடிக்கையால் பெற்றோர்கள் பெரும் அதிருப்தி அடைந்து வருவதாக செய்திகள் வருகின்றது.

தொடர்பு செய்திகள் : தாத்தா அல்ல என பேசியது என் குரல் தான் : நிர்மலாதேவி ஒப்புதல்