இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது.

இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது.

Special Correspondent

இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவே இந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது.இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 287 பேர் புதிதாக 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டி பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.இதில் யோகா சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலியும் அடக்கம் .

பெரும்பணக்காரர்கள் 617 பேர்களில், 182 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 117 பேர் தில்லியையும், 51 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்களாவர். சென்னையைச் சேர்ந்த 15 பேரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

617 இந்தியர்கள் 1000 கோடி சொத்து மதிப்பை மேல ஏறிய இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம் கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Special Correspondent

Demonetisation முன்னரே இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலைக்கு போய்விட்டது என்றும், அதன் பின்னர் பணமதிப்பிழப்பு வந்து அது பல தரப்பட்ட குறு தொழில்களை அழித்து விட்டது என்றும் மோடியின் இந்த தவறான திட்டத்துக்கு அருண் ஜெட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார் என்றும் ஜிஎஸ்டி வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றும் முன்னாள் மத்திய பிஜேபி அரசின் நிதி அமைச்சர் சின்ஹா கூறியுள்ளதையும் புறம் தள்ள விட முடியாது .

இந்திய உற்பத்தி தயாரிப்பு 2014ல் 4.9% இருந்த்து 2017ல் 0.10% சரிவை கண்டு -98% விழ்ச்சியை சந்திததையும்

After 1991 economic liberalisation, India achieved 7% average GDP growth annually. ஆனால் GDP 2017ல் 5்% விழ்ச்சி காரணம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 50% சரிந்தும் ., அதிக வரி விதித்து petrol diesel விலை எற்றிய பிஜெபி அரசின் முன்றாண்டு செயல்பாடு முக்கிய கராணி என்பதையும் மறந்து விடலாகாது...

இதன் காரணமாக ஒரே ஆண்டில் இந்தியாவின் உற்பத்தி திறன் 56 லட்சம் கோடிகள் கடும் வீழ்ச்சியும், கண்டு

ஒரே ஆண்டில் உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியாவின் வீழ்ச்சியும் கண்டு ,

ஆனால் ஒரே ஆண்டில் அம்பானி யின் சொத்து மதிப்பு 1.32 லட்சம் கோடிகள் வளர்ச்சியும் காணும் அதிகரிப்பின் பின்னணியில் குறைக்கப்படாத பெட்ரோல் விலை காரணமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் கோடிகணக்கான இந்தியர்களின் வரி பணம் ஒரே இடத்திலே சென்று சேர்வது எப்படி சிறந்த பொருளாதாரம் ஆகும் என்று பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது நியமனம் செய்யப்பட்ட பிரதமரின் புதிய ஆலோசகர்களாவது அவருக்கு அறிவுறுத்தல் வேண்டும்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு